கிரயப் பத்திரம் என்றால் என்ன?
கிரயப்பத்திர பதிவு என்றால் என்ன?
கிரயப்பத்திரம்:
ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலைக்கொடுத்து வாங்கி அதை உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம்தான் கிரயப்பத்திரம் ஆகும்.
கிரயப்பத்திரப்பதிவு:
கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் முன்னிலையில் பதியப்படுவதுதான் கிரயப்பத்திர பதிவு ஆகும்.
கிரயப்பத்திர பதிவும், விதிமுறைகளும்:
- எழுதிக்கொடுப்பவரின் பெயரும் மற்றும் இன்ஷியல்(INITIAL), அவரின் அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, மற்றும் இதர ஆவணங்களில் உள்ளதுபோலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என சரிப்பார்க்க வேண்டும்.
 - எழுதிக்கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது உள்ள முகவரியும் ஒன்றானதா! என்று சரி பார்க்க வேண்டும். இரண்டும் வேறுவேறு முகவரி என்றால் அந்த இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிறது கிரய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
 - கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் மற்றும் இன்ஷியல்(INITIAL)ஆகிய அடையாள அட்டையுடன் பொருந்துப்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
 
கிரயம் எழுதிக்கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது:
- அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்,
 - அவருடைய பெற்றோர் மற்றும் குடுப்பதாரிடம் இருந்து செட்டில்மென்ட்(Settlement), பாகப்பிரிவினை, விடுதலைப்பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
 - கிரயம் எழுதிக்கொடுப்பவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டுமில்லாம் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று தெளிவாக எழுதி இருப்பது நல்லது.
 - கிரயம் நிச்சயித்த தொகை மற்றும் எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது என்று தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.
 
கிரயம் எழுதிக்கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடம் கீழே உள்ள உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்
- தானம் 
 - அடமானம் 
 - முன் கிரயம் 
 - முன் அக்ரிமெண்ட் (Agreement)
 - உயில் 
 - செட்டில்மென்ட் (Settlement)
 - கோர்ட் அல்லது இணை பாதுகாப்பு செக்யூரிட்டி (collateral security)
 - ரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue attachment)
 - வாரிசு பின் தொடர்ச்சி 
 - மைனர் வியாஜ்ஜியங்கள்(dispute)
 - பதிவு பெறாத பாத்திரங்கள் மூலம் எழுதும் பத்திர கோரல்கள் 
 - சொத்து ஜப்தி 
 - சொத்து ஜாமீன் 
 - பைசலுக்கான சர்கார் கடன்கள் 
 - வங்கி கடன்கள் 
 - தனியார் கடன்கள் 
 - சொத்து சம்மந்தப்பட்ட வாரிசு உரிமம் 
 - சிவில், கிரிமினல் வழக்குகள் 
 - சர்கார் நிலா ஆர்ஜிதம் 
 - நிலக்கட்டுப்பாடு 
 - அரசு நில எடுப்பது முன் மொழிவு நோட்டிஸ் 
 - நிலா உச்ச வரம்பு கட்டுப்ப்பாடு 
 - பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை 
 - மற்ற சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை.
 
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.- சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசாம் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கிறேன் என்று கிரயப்பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
 - சொத்து விவகாரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமப்புல எண் உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 - தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
 - மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண் மற்றும் நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டாபடி சர்வே எண் மிக தெளிவாக இருக்க வேண்டும்.
 - இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும், பிரிட்டிஷ் அளவு முறையிலும் மெட்ரிக் முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும்.
 - மெட்ரிக் முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
 - கிரய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை, சிறு அளவு பிழை இல்லாமல் அடையாளப்படுத்த வேண்டும்.
 - நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள மற்றும் அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
 - பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதிக்கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
 - எழுதிக்கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் மற்றும் முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்பதை சரி பார்க்க வேண்டும்.
 - தேவையான பட்டா, வரைப்படம் மற்றும் அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதிக்கொள்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரி பார்க்க வேண்டும்.
 - முத்திரத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமா, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவண தயாரித்தவர் என்று போன்றோர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிப்பார்க்க வேண்டும்.
 
 இந்த பதிவு  உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
- சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசாம் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கிறேன் என்று கிரயப்பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
 - சொத்து விவகாரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமப்புல எண் உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 - தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
 - மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண் மற்றும் நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டாபடி சர்வே எண் மிக தெளிவாக இருக்க வேண்டும்.
 - இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும், பிரிட்டிஷ் அளவு முறையிலும் மெட்ரிக் முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும்.
 - மெட்ரிக் முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
 - கிரய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை, சிறு அளவு பிழை இல்லாமல் அடையாளப்படுத்த வேண்டும்.
 - நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள மற்றும் அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
 - பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதிக்கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
 - எழுதிக்கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் மற்றும் முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்பதை சரி பார்க்க வேண்டும்.
 - தேவையான பட்டா, வரைப்படம் மற்றும் அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதிக்கொள்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரி பார்க்க வேண்டும்.
 - முத்திரத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமா, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவண தயாரித்தவர் என்று போன்றோர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிப்பார்க்க வேண்டும்.
 


