என்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீதான் தோல்வி அடைகிறாய் ..


மாதம்  முழுவதும் 
உழைக்கும் 
உழைப்பின்  வலி !
சம்பளம்  வாங்கும்,  அந்நாளில் 
வலி  இன்பமாய்  மாறுகிறது ..

இதில்  என்ன  கொடுமை  என்றால்
வரவுக்கு  மீறி  செலவுதான்  போட்டி  போட்டு  நிற்கிறது ..
வாழ்கையில்  எப்படியாவது  முன்னேறிவிடலாம்    
என  நினைத்து  தொடங்கபட்ட 
தொழில்  அனைத்தும்  ..
தோல்வியில்தான்   முடிந்தது   ..
மீண்டும்  மீண்டும்  நான்  எடுக்கப்பட்ட  முயற்சிகள் 
தோல்வியில்தான்  முற்று  பெற்றது ..
இப்போதும்  என்னை  துரத்திக்கொண்டு  வருகிறது 
தோல்வியின்  அடையாளமாய்  "கடன்"..
பெறப்படும்  சம்பளம் 
கொடுக்கப்படும்  கடனாய்  மாறிவிட்டது ..
தோல்வி  எனக்கு  பல  பாடத்தை  கற்றுக்கொடுத்திருக்கிறது  ..

இன்னும்  என்  பயணம்  முடியவில்லை 
வெற்றியை  தேடித்தான்  சென்றுக்கொண்டிருக்கிறேன் .
என்னை  சந்திக்கும்  ஒவ்வொரு  முறையும்  நீதான்  தோல்வி  அடைகிறாய் ..
ஏ தோல்வியே ! 
"உன்னை  பல  தடவை   தொட்ட  என்னால்   
வெற்றியை  ஒரு   முறை    கூடவா  தொட முடியாது"  !?..
 


2 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts